விவரம் தெரிந்து வந்ததோ—இல்லை
வீட்டை விட்டு விரட்டினரோ!
சாதிச் சண்டை சச்சரவோ—இல்லை
சமுதாயப் புறக்கணிப்போ!
புதுவாழ்க்கை தொடங்கவோ—இல்லை
போதும் வாழ்ந்ததென எண்ணியதோ!
கடல் தாண்டிவந்து கலங்குதே--அதன்
காரணம் என்னவென்று சொல்லாதோ!
தமிழகத்தைத் தேடி வந்ததோ—இல்லை
தற்கொலைக்கு உகந்ததெனக் கருதியதோ!
மானம் இல்லாரைக் குறைகூற வந்ததோ—இல்லை
மொத்தமா இறந்து நினைவுபடுத்தியதோ!
தலைவனுக்குக் கட்டுபட்டதோ—இல்லை
ஒற்றுமைக்குக் காவியம் படைத்ததோ!
என் உள்மனம் சொல்கிறது, திமிங்கிலமே
உன்னிடம் கற்கவேண்டியது ஏராளமல்லவோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக