திங்கள், 29 பிப்ரவரி, 2016

பெருமை கொள்ளுங்கள்.



கூட்டமா வந்து
சுவைத்து செல்கின்ற
காட்டு யானைகளே—ஊருசனத்த
கொஞ்சம் நினைத்ததுண்டோ!

கடன வாங்கி பயிரை வளர்த்து
பாழ்பட்டு போனதின் வலியை
உணருமா அரசு?—ஊருசனத்த
கொஞ்சம் எண்ணிப் பார்க்குமோ!

வயித்துக்கும் பொழப்புக்கும்
இடையில் வாழும் மக்கள்
இழந்த பயிரையெண்ணி
அழுதாலும் கவலை தீருமோ!

முடிந்தால் போராடி
வாழப் பாருங்கள்—இல்லை
சிபிச்சக்கரவர்த்தி நீங்களென

பெருமை கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக