ஞாயிறு, 3 ஜூலை, 2016

நானறியேன்!



தீராத பிணிபோல
தீர்க்கமுடன் வீற்றிருக்கும்
திமிர் பிடித்த வறுமையை
துரத்தி விரட்டிவிட,
தன்னம்பிக்கையும், கல்வியும்
தலைமையேற்று உதவ

அயல் நாடு நோக்கி
அடிபெயர்த்தலின் முதல்படி
நண்பர்களோடு படகில்
நீண்ட ஒரு பயணம் கடலில்,
கரை தொடும் வேளையில்
காலன் வடிவில் கடலலை

கூடி வரும் வேளையில்
தாழி உடைந்ததுபோல்
கலத்தோடு அனைவரும்
கடலில் மூழ்க
பாவப்பட்ட மனிதர்கள்
பரிதாபமாய் மாண்டனர்

கருவுற்றிருக்கும்
குடும்பப் பெண்கள்
கர்ப்ப காலத்தில்
மண்ணை உண்பார்களென
மண்ணில் வாழும்
மாந்தர் கூறுவர்

கடல் அன்னையோ
கர்ப்ப காலத்தில்
மனிதர்களை உண்பாளோ?
கர்ப்ப வயிறா?—இல்லை
வெள்ள நீரா?

நானறியேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக