ஞாயிறு, 10 ஜூலை, 2016

மனம் தெளிந்தாரோ என்னமோ?

கணவருக்கு வயது எழுபது
காலார அவரோடு நடக்கும்போது
எந்த ஒரு பெண்ணை பார்த்தாலும்
எங்கு, எதற்கு போகிறோம்
என்பதை எல்லாம் மறந்து

அந்த பெண்ணைத் தொடரும்
அவரின் சபலபுத்தியை
எப்படி திருத்துவது
என்று டாக்டரிடம் முறையிட்டார்
அவரின் வயதான மனைவி

சில ஆடவர்களுக்கு
இப்படி ஒரு சபலம் இருப்பது இயல்பு
இதை யாராலும் மாற்ற இயலாது
இருந்தாலும் கவலைபட வேண்டாம்
என்று கூறிய டாக்டர்

எங்க வீட்டில் ஒரு
வேட்டை நாய் வளர்க்கிறோம்
வீதியில் போகும் காரைக் கண்டால்
விரட்டிக் கொண்டே
பின்னால் ஓடும்

ஆனால் காரைக் கடித்துக்குதறாது
அதுபோலத்தான் உங்கள் கணவரும்
என்று டாக்டர் விளக்கம் தந்தார்,
மூதாட்டி புரிந்து கொண்டு

மனம் தெளிந்தாரோ, என்னமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக