வியாழன், 20 அக்டோபர், 2016

இன்றைய வாழ்க்கை முறை

முப்பது ஆண்டுக்கு
முந்திய காலங்களில்
கடைக்குள்
குந்தியிருக்கும் பொருட்கள்
வயதுக்கு வந்த பெண்போல
வெளியே வர வெட்கப்படும்,
கேட்டால் தான்
எடுத்து கொடுப்பார்கள்

காலம் மாறியது
காலத்திற்கேற்ப சிலுக்குபோல
கண்ணாடி மூடிய கட்டிடம்
கவர்ச்சி காட்ட – அதில்
பொருட்கள் விற்பவர்கள்
சொல்லும் கதைகளில்
மயங்கும் சிறார்கள்போல்
மனதை பறிகொடுக்கும் மாந்தர்

அங்காடிக்கடை நுழைந்தால்
அங்கம் குளிரும், சிலிர்க்கும்
இரைக்காம ஏற வாகனம்,
இதயம் நிறையும் ஒளி—பொருட்கள்
அடுக்கி வைத்த நேர்த்தி
அழகாய் கண்சிமிட்டும்,
வேண்டியதை நாமே
தேர்ந்தெடுக்கும் வசதி.

ஏதோ ஒரு மோகத்தில்
தேவையில்லாப் பொருளையும்
வனிதையர்கள் பாதிவிலையில்
வாங்கி சேர்ப்பர்—பணத்தை
வீணடிக்கும் ஆண்களோ
வேண்டிய பொருளுக்கு
விலை அதிகமென்றாலும்
வாங்கத் தயங்காதவர்கள்

பயன்பாட்டுக்கு வாங்கும்
பொருட்கள் பலனளிக்கும்,
பெருமை சேர்க்கும்—அதுவன்றி
அழகுக்குக் குடை வாங்கி
மழையில் நனையாதபடி
கக்கத்தில் வைத்து
நடக்கும் மக்களின் செயல்தான்
இன்றைய வாழ்க்கை முறை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக