வெள்ளி, 7 அக்டோபர், 2016

வெளி வருவான்.



சிரசில் சுமக்கும்
சிறு வெண் முத்தை
சிதையாமல்
புல்லு தன் சொத்தென
பத்திரமா பாதுகாக்க

முத்தை தனதாக்க
முயற்சித்த ஆதவன்
கள்வனைப் போல்
களவாட எண்ணி
அபகரிக்க

சினமடைந்த புல்லு
சூரியக் கள்வனை
சிறை பிடித்து
முத்துக்குள்
அடைத்து வைத்தும்

எப்போதும் ஏமாறும்
எளியவரைப் போல்                                                                   
புல்லு தன் முத்தை
பறி கொடுத்து
புலம்பித் தவிக்கையிலே

ஒன்று புரியுது
என்றும் வலியவன்
வெற்றி பெறுவான்—அவனை
சிறையில் அடைத்தாலும்

செல்வாக்கில் வெளிவருவான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக