ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

யாருக்கு தெரியும்?

சில்லறைக் காசுகளை
சிதற விட்டதுபோல்
வானத்து நட்சத்திரங்கள்
வீழ்ந்து கிடப்பது
வானத்தின் பெருமையா! –இல்லை
வளமையின் செழுமையா!

வானுலக இந்திரன்
வாழும் தன் மக்களுக்கு
வாரி வழங்கிய பொற்காசுகளோ!—இல்லை
புவி வாழ் கயவர்கள்
பதுக்கிய செல்வங்கள்
பதற்றத்தில் கொட்டியதோ!

அதுவும் இல்லையென்றால்
வேறு என்னதான் காரணம்?
தேவலோக மன்னனும்
செல்லாதென்று சொன்னானோ!
தெருவில் போடுவதற்கு,

யாருக்கு தெரியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக