செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

வரலாற்று உண்மை

விதியென்று சொல்லி
வழியேதும் தேடாது
வாழ்ந்து பழகினால்—தரம்
தாழ்ந்து போகாதோ!

மெய் வருத்தி எடுத்த
முயற்சி அனைத்தும்
தோல்வியுற்றாலும்—அது
தோள் கொடுக்காதோ!

பத்து முறை விழுந்தது
பார்த்து நடக்கத்தானே!
ஒன்பதுமுறை எழுந்தது
ஆன்மாவின் பலமல்லவோ!

முயற்சியே இன்றி
முடங்கிக் கிடக்காமல்
முட்டி மோதி தொட்டுவிடு
தோல்வியும் தோற்கும் ஒருநாள்

வெற்றி உன்னைவிட்டு
விலகிப்போனாலும்—அநுபவம்
பட்டை தீட்டிய வைரம்போல்
பக்குவபடுத்தும்

வாழும் மனிதர்கள்
வாகைசூடி முன்னேற
அநுபவம் வழிகாட்டும்
இது வரலாற்று உண்மை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக