திங்கள், 27 மார்ச், 2017

அனைத்துக்கும்



உடைந்து விழும் பனிப்பாறை
உயரே எழவைக்கும் கடல்நீரை,
உருக்குலையும் கடலலைகள்
உரிமையோடு கரை கடக்கும்
உயிர்களை அழிக்க நினைக்கும்

தவிர்க்க முடியாத உயிர்கள்
தரையை தொடும், துடிக்கும்
தன் உயிருக்கு போராடும்,
தப்பித்து கரையேறும் பறவைகள்
தடுமாறும், இரத்தம் சிந்தும்

காத்திருக்கும் விலங்குகள்
கவ்விக்கொண்டு போகும்
கொன்று தின்றுவிடும்,
வாழ்க்கையொரு போராட்டம் தான்
வாழும் உயிர்கள் அனைத்துக்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக