திங்கள், 22 ஜனவரி, 2018

ஏன் சாகவேண்டும்?



கோடைக் கதிரவனின்
கொடூரப் பார்வை
கொளுத்தும் வெய்யிலில்
காயும் மக்களின் தேகம்
சொரியும் நீர்
சொல்ல நினைக்கும்
சாக்காடு தூரமில்லையென

கேட்பதும்,
கொடுக்க மறுப்பதும்
காலம், காலமாய் நடந்தேறும்
காணொளி காட்சிகள்,
விலாங்கு மீன்போல
விவரமான கட்சிகள்--பாவம்
வறுமையில் வாடும் மக்கள்

அரசியல் கழிவுகளால்
அடைத்து விடாதே கதவுகளை,
நதிகளை இணைத்து
நாளும் ஓடவிடு
சுத்த நீரை சுமந்து வந்து                                  
செழிப்பாக்கட்டும்--தமிழகம்
சொர்க்க பூமியாய் மாறட்டும்

பண்டைய நாகரீகம்
பிறந்ததும், பெருமை சேர்த்ததும்
நதிக்கரை ஓரம்
அதற்காக—இன்று
நாகரீக சீர்கேட்டாலும்
நலிவுறும் பண்பாட்டாலும்

நதிகள் ஏன் சாகவேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக