சனி, 23 ஜூன், 2018

ஆராதிக்கும்




பரமன் படைத்த பூமகள்
பருவத்தில் பூத்திருக்கும்
பாவையவள்
துணை தேடி கயல்விழியை
தூது விட்டாள்
துள்ளிக் குதித்த கயலோ
அள்ளிக் கொண்டது
ஆணின் உள்ளத்தை

அழகு இதழ்களை
ஆடவைத்து
நாட்டிய புன்னகையை
பாட்டின்றி மேடையேற்றி
அரங்கேற்றியதால்
அகம் தொடும் காதல்
ஆமோதிக்கும்மெளனம்
ஆராதிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக