சனி, 20 அக்டோபர், 2018

கூடவே இருக்கலாம்




அகத்தில் உள்ளதை

அம்பலப்படுத்தி

கெட்டவனென்று என்னைக்

காட்டிக் கொடுக்காமல்,

முகத்தில் பூசிய

பூச்சுகளால்

என்னை அழகாகக் காட்டி

என் அகம் தொட்ட உன்னை

இதயத்தில் சுமப்பேன்

உயிர் உள்ளவரை,

பாடி பரிசு பெறும்

புலவர் போலநீயும்

அரண்மனை வாசத்துக்கு

அடிபோடுகிறாயோ!

கவலை வேண்டாம்

கைவிட மாட்டேன்

கண்ணாடியே

கூடவே இருக்கலாம்                                                    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக