துன்பங்கள் ஆயிரம்
தொடர்ந்து வந்தாலும்
கடைபிடித்தல் என்றால்
கடைசி வரை விடாமல்
பிடித்திருப்பது என்பது
பொருளாகும்
இடையூறுகளும்,சோதனைகளும்
அணிவகுத்து நின்றாலும்
நன்மையென்று எண்ணிய
நல்ல செயல்களை விடாது
செய்துகொண்டு இருப்பவர்கள்
என்றும் தோற்பதில்லை
நல்லதெனத் தெரிந்ததனை
நலிவுற்று சிதையாமல்
மாற்றிக்கொள்ளாத
மன உறுதி தான்
அரிச்சந்திரனை இழந்தும்
சத்தியம் பேச வைத்தது
நன்மை கடைபிடி எனும்
ஒளவையின் வாசகம்
சிறியது தான்—ஆனால்
வரம்பற்ற பொருள் கொண்டது
மூர்த்தி சிறியது தான்
கீர்த்தி பெரியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக