குறுக்கு வழியில்
கிடைக்கும் செல்வத்தை
அடுத்தவர்க்கும் கொடுத்துதவி
அகம் மகிழாம,
தன்னால் கிடைத் ததென
தானே பயனுற நினைப்பவன்
படைப்பின் நோக்கத்தை
பாழ்படுத்தும் பாவி அவன்
ஆறு,மரம் போன்றவை
அனைவருக்கும் உதவுவதுபோல்
தன்னிடம் மிகுந்திருக்கும்
தனம், பொருள், கல்வி,
ஞானம் எதுவானாலும்
பிறருக்கும் கொடுத்து உதவுவது
பெருமைக்குரியது,
பாராட்டத்தக்கது
பிறருக்குக் கொடுக்காமல்
பூட்டிவைக்கும் செல்வத்தால்
நிம்மதி பறிபோகும்,
நீ இறந்த பின்னே
உன்னோட கூட வருமா?—இல்லை
உனக்கு பெருமை சேர்க்குமா?,
உதவியேதும் செய்யாதவனுக்கு
உதவிட யாரும் வருவதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக