சனி, 12 அக்டோபர், 2019

வறுமையை ஒழிப்பதற்கு




அனைத்து மக்களும்
அமைதியாய் இளைப்பாற- இயற்கை
இரவையும், பகலையும் தந்தது
இரவு பகல் என்பது
இன்பம் , துன்பம் போல்
மாறி ,மாறி வருவது

உலகுக்கு ஒளி தர
ஒருவனுண்டு
அவனை ஆதவன் என்பார்கள்
அதுபோல
இருளுக்கு எவன் உண்டு ,
இல்லாமலா

இரவுக்கு துணையாக
இருப்பவர்கள் திருடர்களும்
கொள்ளையர்களும் தான்
கரப்பான் பூச்சி , ஆந்தையைப்போல
இருளில் தனக்கு வேண்டி
திரிபவர்கள்

துன்பத்தை நினைத்துத்
துயரம் கொள்ளாமல்
ஆதவனைப்போல
ஒருவனைத் தேடி பிடியுங்கள்
வாழும் மக்களின்
வறுமையை ஒழிப்பதற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக