வியாழன், 4 செப்டம்பர், 2014

நான் இன்னும் உயிர் வாழ.


உயிரெடுக்க வந்தவனை

கள்வனென சொல்லவோ!

கதை முடிக்க வந்திருந்தால்

காலைத் தொட்டு வணங்கேனோ!

 

என்னை சோதிக்க

அவன் என்னென்ன செய்திருந்தும்

என் கூட்டுக் காற்றுக்கு

என் மீது பற்றுதான்

 

பொழச்சென்ன லாபமென்னு

போகத்தான் துணிஞ்சாலும்

படுக்காமல் நான் போக

பரமனை வேண்டி நின்றேன்

 

உள்ளிருக்கும் சீக்குகள்

என்னைப்போல் சிக்கனம்

டாக்டர் எழுதும் மருந்துகளோ

அவரோட மனம்போல தாராளம்

 

வாங்கி வைத்த மருந்தெல்லாம்

காலமாகிப் போகையிலே

காலம் தன் உயிர்வருத்திக் கடக்கிறது

நான் இன்னும் சிலநாட்கள் உயிர் வாழ.

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக