ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

இதயம் தான் ஏற்குமோ?


சுதந்திரம் பெற்றதால

சுகமாய் நீ வந்தாயோ!

சுகமாய் வந்ததால

இங்கு தடம் பதித்து—நீ

வேரூன்றி நின்றாயோ!

 

கண்ணுக்குள் நீ புகுந்ததால

மனசை பறித்தாயோ!

பறித்த மனசால

கரங்கள் நீண்டுவிட

கையிருப்பு ஆனாயோ!

 

உன்னோட நட்பால

ஊரெல்லாம் உறவானாதோ!

உறவான பாசத்தால

பாமரனும் ஓட்டு போட

கையூட்டு பெற்றானோ!

 

பழக்கம் தொடர்ந்ததால

ஆசையும் கூடினதோ!

கூடிய ஆசையால

ஊழல்கள் மலிந்து

நாடு தலை கவிழ்ந்ததோ!

 

அரசியலார் அரவணைத்ததால

தொண்டர்கள் ஆதரவளித்தாரோ!

ஆதரவு தந்த தொண்டர்கள்

உறுதுணையாய் நின்று

உனை பாதுகாத்தனரோ!

 

இமயமலையும் இங்குண்டு

இமாலய பங்கும் உனக்குண்டு

இருந்தும்

இல்லாத தண்டனையால்—உன்னை

இதயம் தான் ஏற்குமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக