செவ்வாய், 19 மே, 2015

நடுத்தெருவில் நிற்க நேரும்.

ஆதியும், அந்தமும்
அறியப்படாத இயற்கை,
அகத்தோற்றம்
அறியாத இரகசியம்,
புறத்தோற்ற மாற்றங்களால்
ஆதி மனிதன் அதனை
இறைவனாக்கி வழிபட்டான்

கால ஓட்டத்தில்
இறைவனையும் தொலைத்து
இயற்கையையும் அழித்து
பூமியை சீரழித்தான் மனிதன்,
நிம்மதி இழக்கும் நேரம்
நெருங்குவதுபோல் காட்சிகளின்
நிகழ்வுகள்

நாடுகளுக்கிடையில்
போட்டி, பொறாமை,
அழிக்கும் ஆயுதங்களை
ஆழ் கடலில் சோதிப்பதும்,
காசு, பணத்திற்குக்
காடு, மலைகளையும்
விளை நிலங்களையும்
அழிப்பதால்

ஓசோனில் ஓட்டை—சூரியனின்
நேரிடைப் பார்வை
வெப்ப அதிகரிப்பால் ஏற்படும்
நிலையற்ற பருவ மாற்றத்தையும்,
அணுக்கதிர்கள் உண்டாக்கும்
அழிவுகளையும்
சோதனை செய்யும் நாடுகள்
சொல்ல மறந்தவைகள்

இயற்கையை இயற்கையாய்
இருக்கவிட்டு
இயற்கையை பாதுகாக்க
எல்லோரும் முயல வேண்டும்
இல்லையேல்
நேப்பாள மக்கள் போல்
நடுத்தெருவில் நிற்க நேரும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக