உலகமே இதன் காலடியில்
உண்மை அறிந்தோர்க்கு
உவகை எந்நாளும்
வெற்றியும் செல்வமும்
வழங்கிடும்—கூடவே
வசந்தம் தரும் மேனிக்கு
பெறுகின்ற செல்வம்
பெருமை தராதபோது--உழைப்பு
மரியாதை தந்து மகிழ்விக்கும்
உயர்வான உழைப்பால்
உடல் உறுதி பெறும்
முதுமையும் இளமையாகும்
அறிவால் தொடங்கி
ஆற்றலில் முடியும் செயல்
தலையெழுத்தையே மாற்றிவிடும்
உளி படாத கல் சிலையாவதில்லை
உழைப்பில்லாத வாழ்வின்
கனவு நனவாவதில்லை
சிரத்தையுடன் உழைத்து
சிகரம் தொட்டவர்களை—மக்கள்
சிரசில் வைக்க மறந்ததில்லை
ஆனிவேரின்றி மரமில்லை
உழைக்கும் வர்க்கமின்றி உலகில்லை,
அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக