வெள்ளி, 24 ஏப்ரல், 2015

வெள்ளை நிறத்தழகி

மண்ணில் பிறப்பெடுத்து
மனதைக் கவர்ந்திழுக்கும்
வெள்ளை நிறத்தழகி
மறைந்து இருந்தாலும்
தூது விடும் பேரழகி

உறவோடு வாழ்ந்தாலும்
விடுபட்டு பிரிந்தாலும்
கொண்டவனின் மனம்
கோணாமல் மகிழ்விக்கும்
குணவதி

ஆலயங்களில்
இவள் கைமாறுவாள்
இருந்தாலும்
படைத்தவனின் நெஞ்சில்
நிறைந்திருப்பாள்

பணமிருக்கும் இடமறியும்
கள்வனைப்போல்
வீட்டுக்குள் இருந்தாலும்
இவள் இருப்பிடம்
தெரிந்துவிடும் மாந்தருக்கு

கோவில்களில்
வாசம் கொள்வதால்
இவள் தேவதாசியல்ல,
மனதை அள்ளும்

மல்லிகைப்பூ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக