புதன், 1 ஏப்ரல், 2015

பெருமையா? சிறுமையா?

கத்தும் குழந்தை
பிழைத்துக்கொள்ளும்
என்பார்கள்
காப்பவனும் கைவிட்டால்
கத்துவது சாத்தியமோ?

எப்போதும் வறுமை
சோர்ந்து போவதில்லை
மௌனமாய்
கையேந்துபவர்களின் உயிரை
பசியாறித்தான் போகிறது

பிச்சை எடுப்பவரில்
பி.ஹெச்.டி டாக்டர்,
இஞ்சினீயர், வக்கீல்களென
படித்தவரும் உண்டு
பெருமையா? சிறுமையா?

ஏன் இந்த அவலநிலை
ஆயிரந்தான் சொன்னாலும்
வெட்கப்பட வேண்டியது
தனி மனிதனல்ல—ஒட்டுமொத்த

சமுதாயம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக