வெள்ளி, 17 ஏப்ரல், 2015

சொல்ல மனம் வருமா?

கருத்த உடலழகி
பருவக் கன்னியவள்
பக்கம் வந்து நின்னு
பார்க்கையிலே
பாழும் மனது
பரிதவித்து ஏங்காதோ!

கை கொடுப்பாள்
என்று எண்ணி
காத்திருந்தபோது
மனமிரங்கி
முத்தமிட்ட ஈரத்தோடு
முக்காடு போட்டு
ஓடி ஒளிந்தவளை

சனியனென்று மனம்
சாபமிட்டாலும்,
மன்னித்து,
மனம் குளிர வைத்த
கோடை மழைப்பெண்ணை
கொடுமைக்காரியென
சொல்ல மனம் வருமா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக