செவ்வாய், 7 ஏப்ரல், 2015

பதறிப் போனேனே!

இளம் வயதில்
சேர்ந்து விளையாடி
நினைக்கவும், நனைக்கவும்
செய்த உந்தன்
பசுமை நிகழ்வுகளை
மறக்க முடியாமல்

பொன்னான நினைவுகளை
நெஞ்சில் சுமந்து கொண்டு
வயிற்றுப் பிழைப்புக்காக
படித்து, பொருள் தேட
பல ஊரு போனதால
பிரிந்து போனேன் உன்னை

தூங்காதபோது உன் நினைவு
தூங்கும்போது உன் கனவு
என்றாவது ஒரு நாள்
மீண்டும் சேருவோம்
என்ற நம்பிக்கையில்
வாழ்க்கையோ ஓடிவிட்டது

ஆசையாய் ஊர் திரும்பி
உனை பார்த்து வாழ்த்தாவது
கூற எண்ணி வந்தபோது
பதறிப் போனேனே!
பாழ்பட்டு போனாயே

பாமினி ஆறே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக