வெள்ளி, 10 ஏப்ரல், 2015

உயிர் வாழ்வதற்கு.

இறைவா!
நீ படைத்த நான் கூட
கையேந்தும் ஏழைக்குக்
கைகொடுத்து பசிபோக்கிக்
காத்ததுண்டு

எந்நேரமும் காத்தருளும்
எம்பெருமானே!
ஏன் இந்த அவலம்?
அதுவும் உன் எல்லையில்,
நீ அறியாததா!

வயிற்றுக்கு வழிதேடி
பிழைக்க வந்த
மலை வாழ் ஏழையைக்
கொடுமை படுத்திக்
கொன்றது நியாயமோ?

ஏவி விட்டவன்
எங்கோ இருக்க
எடுத்த உயிரத்தனையும்
அப்பாவி மக்களான
ஏழை எளியவர் தானே!

உலகம் மாறும் போது
உன் படைப்பையும் மாற்று
முடிந்தால்
அனைவரையும் செல்வந்தராய்
படைத்து விடு

இல்லையேல்
காட்டு விலங்காய் பிறக்க விடு
தவறு செய்தாலும்
மீண்டும் காடு சென்று
உயிர் வாழ்வதற்கு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக