வியாழன், 7 மே, 2015

பெரும் கொடுமை.

ஏது நடந்தாலும்
எதுவும் சொல்லாத
மாயவனைப் போல்
மௌனம் காப்பது,
கனக்கிறது நெஞ்சம்         

நடக்கின்ற இறப்புகளின்
தொடர் போராட்டம்,
உயிரோடு புதைக்கும்
நில நடுக்க பேரிடர் போல்
நிலைகுலையும் மக்கள்

கல்வெட்டில் பதிவான
வரலாற்று சின்னம் போல்
எழுதி வைத்த வார்த்தைகள்
எண்ணத்தை வெளிபடுத்தி
இயலாமையைக் காட்டினாலும்

நெறியோடு நேர்மையாய்
நடக்கின்ற மாந்தர்கள்
வெறுமையென வாழ்க்கையை
வேரறுக்கத் துணிவது

பெரும் கொடுமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக