முக நூலில் முகம் காட்டி
அகம் தொட்டு
அகலாமல் நினைவிலிருக்கும்
காட்சியினைக் கண்டதற்கு
என்ன தவம் செய்தோமோ?
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லென்று
சொல்லும் தமிழ் மண்ணின்
பழமொழி
பொய்த்ததுபோல்
பெற்றவளே பிள்ளைக்கு
ஊற்றி தந்த கள்ளை
சேர்ந்தமர்ந்து குடிக்கக்
கற்று தரும் அவலம்
வறுமையா இல்லை பெருமையா?
நல்லதுக்கு
நான் நீயென்று
போட்டி போடும் எல்லோரும்
இந்த சீர்கேட்டுக்கும்
பொருப்பு தானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக