ஆலயம் சென்று
ஆண்டவனை வழிபட்டு
வேண்டுகின்ற வரம்போல
ஊர்மக்கள் கோரிக்கை
வீட்டுக்கு ஒருவரென
வீதிக்கு வந்து
வேதனையை சொல்லி
குரல் கொடுத்தும்
செவிடன் காதில் ஊதிய
சங்கு போல்
எங்கும் யாரும்
செவி சாய்க்காதபோது
போராட்டம்
போர்க்களமாகி
பொருளும் உயிரும்
பறிபோவது சரிதானோ?
ஓர் அழிவை
மற்றொரு அழிவால்
நியாயப்படுத்துவது
முறைதானோ?
தீர்வு எட்டாமல்
முயல் ஆமை கதையில்
முயல் தோற்றது போல்
முயலாமை தான் காரணமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக