புதன், 29 ஜூலை, 2015

நல்லவர்கள் எங்கே

மானிட சேவையென‌
முரசு கொட்டி
கட்டி எழுப்பிய‌
கல்விக் கூடங்கள்``அதில்
க‌ட்டிய‌வ‌ன் ப‌ண‌ம் ப‌ண்ண‌
க‌ற்றுக்கொண்டான்
க‌ற்க‌ப் போன‌வ‌ன்
இருந்த‌ வீட்டையும்
விற்றுவிட்டு
தெருவில் நின்றான்.

ந‌ல்ல‌து ந‌ட‌க்க
இறைவ‌னைத்தேடி
ஆல‌ய‌ம் செல்வ‌து போல்
உயிரைக் காக்க‌
ம‌ருத்துவ‌ரைத்தேடி
ம‌ருத்துவ‌ம‌னை ஏறிய‌
ஏழையின் வாழ்வு
ப‌ட்ட‌ க‌ட‌னில் ப‌ட்டுபோக‌
கொடுத்த‌ ம‌ருந்தில்
கொழுத்த‌து ம‌ருத்துவ‌ரின்
செல்வ‌ம்.

ம‌குட‌ம் சூட‌
ம‌குடி வாசித்து
ம‌ய‌ங்க‌ வைத்த‌வ‌ன்
உய‌ர்ந்து போனான்
அர‌சிய‌ல்வாதியாகி
அகில‌த்தையே சுருட்ட‌லானான்
உய‌ர‌த்தில் ஏற்றிய‌
பாம‌ர‌னோ
இருந்த‌தையும் தொலைத்து
இல‌வ‌ச‌த்தைத் தேடுகிறான்

பெரிசு அழைத்துவ‌ந்த‌
பெரிய‌ ஆபிச‌ரிட‌ம்
ப‌ட்ட‌ க‌ஷ்ட‌ம் சொல்லி
ந‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ண‌த்துக்கு
பாவ‌ப்ப‌ட்ட‌ விவ‌சாயி
ம‌னு கொடுத்தான்.
ப‌ண‌ம் கொடுத்தால்
காரிய‌ம் ந‌ட‌க்குமென்ற‌தால்
விதியயை எண்ணி விவ‌சாயி
வீதியில் ந‌ட‌க்க‌லானான்
வெறுங்கையோடு.

பார‌த‌ தேச‌த்தில்
ம‌ஹாபார‌த‌த்
த‌ரும‌னைப்போல்
உல‌க‌ மாந்த‌ர் அனைவ‌ரும்
ந‌ல்ல‌வ‌ரென்று கூற‌
என்னால் முடிய‌வில்லையே!
உல‌க‌ம் கெட்டுவிட்ட‌தா?~~இல்லை
த‌ரும‌னின் குரு
சொன்ன‌துபோல்
நான் ந‌ல்ல‌வ‌னில்லையோ?
உல‌க‌ம் ந‌ல்ல‌தாக‌த் தெரிய‌!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக