செவ்வாய், 21 ஜூலை, 2015

இரட்டை குழந்தைகள்


ஒரு தாய் வயிற்று

பிள்ளைகளாய்

ஊருக்கே உறவாகிப்போன

இரட்டைக் குழந்தைகள்

 

ஒரு பிள்ளை

கை கொடுத்து உதவும்

மறு பிள்ளையோ

காலை வாரிவிடும்

 

பகைமை கொண்ட

பங்காளிகள் போல்

பிள்ளைகள் இருவரும்

ஒரே வீட்டில் வாழ்வதரிது

 

கை கொடுத்தாலும்

காலை வாரினாலும்

இரண்டுமே ஒருவரிடம்

நிலைத்து நிற்பதில்லை

 

எதிர் எதிரா இருந்தாலும்

எல்லோர் வாழ்விலும்

வந்து வந்து போகும்

இன்பமும் துன்பமும் தானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக