புதன், 30 மார்ச், 2016

நிம்மதி தானே!

சிந்தையிலே நீ புகுந்தால்
சிலை கூட கண்ணீர் விடும்
செய்யும் பணியால்
சோர்வடையா மனித உயிர்
சாகவும் துணியும்

மனசு அமைதியுற
தூசு எனக்கொண்டால்
லேசு தான்,
நெஞ்சில் நிலைக்கவிட்டால்
நஞ்சாய் அழித்து விடும்

அழையா விருந்தினராய்
அனைவரையும் காண வரும்
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாய்
உபத்திரவம் தந்து போகும்—இருந்தும்
விடுபட முடியாது மனிதரால்

கனிவாய் வந்தமரும்
காரியங்களைக் கெடுக்கும்- மாந்தரைக்
கண்ணீர் விட வைக்கும்
அழவைத்தது போதாதென
ஆடி வெறுப்பேற்றும்

வலியால் பின்னப்பட்ட
வலையே கவலை,
சிறு சிறு விஷயங்களை பெரிசுபடுத்தி
நெஞ்சில் கொள்ளாமல்

நீக்கினால் நிம்மதி தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக