புதன், 11 மே, 2016

தொடவும் முடியாது.



வானத்து அரசனுக்கு
வண்ண மலர்களால் வாகை மாலையா?,
வருணனை வரவேற்க
வானவெளி தோரணமா?—இல்லை

ஆதியின் துணையோடு
ஆழி, நதி நீரை
அபகரித்த மேகத்தால்
ஆகாசம் வந்த நீர்த்துளிகள்

தாயின் நினைவால்—மழையாய்
தாயகம் திரும்பியதில்
வானதேவதையின்
வண்ணசேலை நனைந்ததோ!

ஈரமான சேலையின்
நீரை போக்க
வானவெளியில்
உலர வைக்கிறாளோ!

சேலை நீளமானதால்
சேரி பெண்போல—அவள்
பாதியை உடலில் சுற்றி
மீதியை காய வைக்கிறாளோ!

வானதேவதையின் வடிவழகை
ஆதவன் அருகில் காணாதவாறு
எப்போதும் அவள்
எதிர் திசையில் தோன்றுகிறாளோ!

இரவில் அவள் வந்தால்
வெள்ளை சேலையில்
தோன்றுவாள்—மறையும்
தெளிவற்று பிறவண்ணங்கள்

வண்ண புடவையுடுத்தி
வரும் வாணதேவதை
ஒரு கற்புக்கரசி—அவளை

நெருங்கவும், தொடவும் முடியாது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக