புதன், 11 நவம்பர், 2020

அது உலகமுமில்லை

 

பெண் என்பவள்

தெய்வத்திற்கு நிகரானவள்

படைத்தலும், காத்தலும்

பொதுவானது இருவருக்கும்

 

ஆணும், பெண்ணும்

முரண்பட்டு நிற்காமல்

சமன்பாட்டு நிலையில் இருப்பது

சாலச் சிறந்ததாகும்

 

ஆணும் , பெண்ணும்

ஒருவரை ஒருவர் புரிந்து

இணைந்து வாழ்ந்தால்

வாழ்க்கை வளம் பெறும்

 

பெண் இல்லாமல்

உலகமே இல்லை

பெண் இல்லாவிட்டால்

அது உலகமுமில்லை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக