ஞாயிறு, 12 அக்டோபர், 2014

எங்கிருந்து வரும்?


நீயும் நானும்

சேர்ந்திருந்தால்

உள்ளம்

உவகை கொள்ளும்

எனக்கும் பெருமை

கூடும்.

 

நீ மட்டும்

கொஞ்சம்

மக்களை

அரவணைத்தால்

உலகமே

உன் காலடியில்

 

நட்புக்கு

பாலம் அமைத்து

பாசம் கொள்ள

வைக்கிறாய்.

வணிகத்துக்கும்

வலு சேர்க்கிறாய்

 

நீர் கண்ட

நிலம்போல

நலம் பெறும்

மனதும் உடலும்

உனை இறையென

வணங்காதோ!

 

இன்று ஒன்றாய்

வசித்திருந்தும்

பெற்றோர்

பிள்ளைகளுக்கு

இல்லாத நேரத்தால்

இல்லாது போனாயோ!

 

பணம், படிப்பு

இரண்டை மட்டும்

தேடி அலையும்

மக்களுக்கு

புன்னகை

எங்கிருந்து வரும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக