வியாழன், 16 அக்டோபர், 2014

இறைவனின் நாடகமோ!


வசித்த வீடும்

வாழ்ந்த ஊரும்

விடுபட்டு

பிரிந்து போனதும்

 

குறும்புகள் பல

செய்த பிள்ளை

பொருள் தேடி

வெளிநாடு சென்றதும்

 

செல்லமா சீராட்டி

வளர்த்த பொண்ணு

மணமுடித்து

மணாளனோடு போனதும்

 

பழக்கப்பட்ட

வாழ்க்கை முறை

முதுமையில்

மாறுபட்டு போனதும்

 

மாற்றங்கள் ஒவ்வொன்றும்

பிரிவைத் தந்து

மனதை வருத்திய

காட்சி அனைத்தும்

 

வாழ்க்கையின்

இறுதி பயணத்துக்கு

ஒத்திகை பார்க்கும்

இறைவனின் நாடகமோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக