ஊருக்கு அருகில்
ஒரு ஊருணி
ஊருணி எங்கும்
தாமரைப் பூக்கள்
நீர் முழுதையும்
மறைத்து வைக்கும்
தலை விரித்து
படுக்கும்
தாமரை இலைகள்
இலைகளோ
தண்ணீரின் அளவுபோல்
தாழும், எழும்—முன்னைய
குலமகள் போல்
இன்றோ
தாமரை இலைகள்
நீருக்கு மேலெழுந்து
தனித்து வாழ்கின்றன
படித்து உயர்ந்ததால்
பாசம் மறந்து
விவாகரத்து கோரும்
புதுமைப் பெண்போல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக