புதன், 6 ஏப்ரல், 2016

பாவமல்லவோ!

வகிடெடுத்து பிளந்ததுபோல்
வரண்டுபோன பூமி
பாளம், பாளமாய்—பசிக்கு
பகிர்ந்தளித்ததுபோல்
பார்வைக்கு ஒரு காட்சி
இயற்கையும் அரசியல் நடத்துதோ!

உள்ளத்தில் கொதிக்கும்
உழவரின் பசிக்கொடுமை-கண்ணீராய்
விழிகளில் பொங்கி வழிய,
உறவாகிப்போன வறுமையால்
உழும் ஏரைப்போல் உருமாறி--போக
வழி காட்டுதோ!

ஆளில்லா வீடுதேடி
அகப்பட்டதை அபகரித்து
உயிர்வாழும் படித்தத் திருடனுக்கு
உழைத்து முன்னேற—அவன்
உள்ளம் நினைக்கலையா?—இல்லை
வேறுவழி தெரியலையா?

படுத்தியெடுக்கும் பசியால்
பண்ணுகிற தவறை
பலமுறை செய்வதால்
பழக்கமாகும் சுபாவத்தை
போக்கமுடியுமா?—அது
பாவமெனத் தோணலையோ?

நிலத்தில் வாழ் உயிர்களுக்கு
நித்தம் நீரும், சோறும் கிடைத்து
நிம்மதியாய் வாழவழி தேடாமல்
மாந்தரை வறுமையோடு வாழ
பழக்கப்படுத்தும் சுபாவமும்
பாவமல்லவோ!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக