வியாழன், 22 செப்டம்பர், 2016

கைகொடுக்க வேணுமம்மா!


பக்கத்து வீடுகளில்
பாசம் பொங்கி வழிந்த
பொன்னான காலமது,
மடிந்த மனிதர்களோடு
முடிந்தது நம்பி வாழ்ந்தது

பங்கு பாகம்
பிரிக்காதபோது
பாசமுள்ள தாயாய்த்தான்
ஒரு குறையுமில்லாம
ஓடிவந்து காத்தவ நீ

அடுத்த வீட்டு பிள்ளையென
அரவணைக்க மறந்த நீ
இப்போ மீண்டு வருகிறாய்,
தாயைத்தேடும் சேயைப்போல
தவிக்குது என் மனசு

ஊருசனம் தாகம் தணிய
உன் திருமுகம் காட்டம்மா,
நட்டபயிர் எழுவதற்கு
நீ நடந்து வாம்மா!
விவசாயி உயிர்வாழ
வாய்க்கால்வழி வந்து சேரம்மா!

ஏழை வயிற்றில்
எப்போதும் பாலை வார்க்க
காலம் முழுதும் உன்
கருணை உள்ளம்

கைகொடுக்க வேணுமம்மா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக