வியாழன், 1 செப்டம்பர், 2016

காலனுக்கும் பொறுக்காது

காலம் பல கடந்தாலும்
கவலை கொள்ளாத கிராமம்,
வசதியில்லாம வாழ்ந்தாலும்
வாய் திறக்காத ஊருசனம்,
வரமா?இல்லை வசமா?

எட்டாத தூரத்தை
எட்டி பிடித்ததுபோல
ஊரெங்கும் மேடை பேச்சு,
வாழும் ஏழைகளுக்கோ
உயிர் காக்க தவிக்கும் நிலை

நோய், நொடியென்றால்
நாய் கூட திரும்பிப் பார்க்காத
நாதியற்ற நிலை,
பத்து மைல் தூர பேருந்து பயணம்
மருத்துவமனை போய்சேர

மனைவிக்கு வயிற்றுவலி
மருத்துவமனை அழைத்து செல்ல
மாமியாரும், கணவரும்
பக்கபலமா துணைக்கு வந்து
பேருந்தில் போகும்போது

பாதி தூரம் கடந்தபின்
பாவி எமன் உயிரை பறித்துவிட
பாவம் கணவன் கண்கலங்க
பேருந்து நடத்துனரோ—மூவரையும்
பேய்மழையில் இறக்கிவிட

மனிதர்கள் வருந்தவில்லை
மாண்டது மனிதநேயம் தான்,
கொட்டும் கணமழை—கண்ணீர்
விட்டதுபோல் அழுத காட்சி
காலனுக்கும் பொறுக்காது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக