மனித தாகத்துக்கும்
மண்ணின் தேகத்துக்கும்
தண்ணீர் வேண்டி
தவித்தபோதெல்லாம்—யாரும்
நீதியை மதிக்கலையே!
தாய்மார்கள்
தாய்ப்பாலுக்கு தடை
போடாதவரை
காவிரியும் தாயாய்த்தான்
காத்து வளர்த்தாள்
இறைவனைக் கேட்டுகிட்டா
இங்கு வந்து பிறந்தோம்,
வசிக்கவும், நேசிக்கவும்—நாளும்
யாசிக்கும் நிலையில் நாம்,
காக்கும் பொறுப்பு அவனுக்கேது?
கண் கவசமும்,
கடிவாளமும்
குதிரைக்கு போடுவார்கள்
பார்த்தது உண்டு
பாயும் காவிரிக்குமா?
மடியில் பால் சுரக்கும்
உயிர்களுக்கு தான்
மனசில் பாசம் சுரக்குமாம்
நல்லவேளை
நாமெல்லாம் மனிதர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக