திங்கள், 29 ஆகஸ்ட், 2016

மனசிலும் ஈரம் வேண்டும்

மண்ணில் வாழ் மாந்தருக்கு
மஹாபாரத இதிகாசம் தந்து
பாரத தேசத்தின் பண்பாட்டை
பெருமைபட வைத்தவர்
பகவான் வியாசர்                                  

பண்டைய மக்களின் தர்மத்தை
போற்றி புகழ்பாடும் மாந்தர்
இன்று வேறுபட்டு போனதேன்?
இல்லையென்று வருவோர்க்கு—இல்லை
என்று சொல்ல இதயம் இல்லையா?

அனைத்து உயிர்களையும்
அரவணைத்து உதவும் நன்மை
எதுவோ அது புண்ணியமாகும்,
எந்த ஒரு உயிருக்கும்
செய்யும் துன்பம் பாவமாகும்

எல்லா மதங்களும் இதை
ஏற்றுக் கொண்டது தான்
இருந்தும் இன்றைய பொழுதில்
சமூக அக்கறை சீர்கெட்டதா—இல்லை
செத்தழிந்ததா?

எங்கும் சமூக அக்கறை தான்
எல்லாவற்றிற்கும் அடித்தளம்,
மரம்,செடிகளுக்கு மட்டுமல்ல—ஈரம்
மண்ணில் வாழ் உயிர்களுக்கும் அவசியம்

தருவதற்கு மனசிலும் ஈரம் வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக