வெள்ளிப் பணத்துக்கு
விரைந்தோடும் மாந்தர்
தொலைதூர பயணம்—அதில்
தொலைத்துவிடும் சொந்தபந்தம்
முற்றும் துறந்ததுபோல்
முடங்கிப்போகும் உணர்வுகள்
ஒற்றுமையாய் வாழாமல்
உறவுகளை ஒதுக்கி வைத்தால்
வாழ்க்கை பயணம்
வளம் பெறுமா?—இல்லை
தடைபட்டு, தடுமாறித்
தடம் புரளுமா?
நாகரீக வளர்ச்சியில்
நாம் இன்று வாழ்ந்தாலும்
அன்பையும், உறவையும்
அரவணைக்காது போனால்
நிம்மதியும், மகிழ்வும்
நிலைக்குமா வாழ்வில்?
உறவுப்பாலம் சிதைந்ததால்
விவாகரத்தென திருமண உறவும்
வீதிக்கு வரவில்லையா?
சீர்கெட்டுபோன உறவால்
சீரழியும் கலாச்சாரம்
சிறக்குமா சமுதாயம்?
உறவுகள் தான் வாழ்வில்
இறுதி வரை துணை நிற்கும்
மறக்காமல் வாழ்ந்தால்
மானுட வாழ்வும் முழுமையுறும்
மக்கள் சமுதாயமும்
மரியாதை பெறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக