வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

வழிபடும் தலம்

இறைவனை—பகலின்
ஒளியைக் காட்டி
உண்டு என்றார் சிலர்,
இருளைக் காட்டி
இல்லை என்றார் சிலர்,
இன்ப துன்பம்போல்
எங்கும் எதிலும்
இருப்பானென
சொல்வோருமுண்டு

எதுவானபோதிலும்
இன்னா செய்யாத
இதயமும்,
இல்லார்க்குக் கொடுக்கும்
ஈகையும்—எவரிடம்
நிறைந்திருக்கிறதோ
அவனே இறைவன்
அவன் பாதம்பட்ட
இடமே வழிபடும் தலமாகும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக