செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

திறவுகோல்கள்


எல்லா மொழிபோல
இதுவும் பழமையானது,
பழம் போன்று இனிக்கும்
பாரிலுள்ளோர் விரும்பும்
சாகா வரம் பெற்ற முதுமொழி

சொல்லும், பொருளும்
செல்வாக்கு பெற்றது,
அறிவுக் களஞ்சியமென
அகிலம் போற்றுது—இதற்கு
இலக்கிய மதிப்புமுண்டு

அநுபவத்தில் விளைந்த மொழி
அரவணைத்து காத்த—பண்பாட்டின்
அரிய பொக்கிஷம்,
சமுதாயத்தின் மனப்போக்கை
சிறப்பாக எடுத்துக்கூறும்

பேச்சு வழக்கில்
பெருமை சேர்த்த சொற்கள்,
பலருடைய அறிவாலும்
புத்தி சாதுர்யத்தாலும் வடிவம் பெற்று
ஆபரணமாய் ஜொலிக்கும்

அறிவால் உருவாகும் பழமொழிகள்
அறிவையும் வளர்க்கும்
உயர் கருத்துக்களை எளிமையாக்கி
உணரவைக்கும் பழமொழிகள்

சிந்தனையின் திறவுகோல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக