திங்கள், 5 டிசம்பர், 2016

அநுபவம்

சுடலை போகும்
உடலை
விட்டு பிரிந்த
உயிர்
போன இடம் எங்கு என
சொல்லத் தெரியாத
முனிவருக்கு
விடை பகிர்ந்தாள்
விலை மகளின்
வேலைக்காரி,
வெட்கப்பட்ட முனிவர்

வேதனையுற்றார்,
வேலைக்காரியிடம்
கையேந்தினார்
அறிவு பிச்சைக்கு,
கதையென்றாலும்
கரு உண்டு—கற்றது
கை மண்ணளவு
கல்லாமல் அறிவது
உலகளவு
அது தான் அநுபவம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக