சுடலை போகும்
உடலை
விட்டு பிரிந்த
உயிர்
போன இடம் எங்கு என
சொல்லத் தெரியாத
முனிவருக்கு
விடை பகிர்ந்தாள்
விலை மகளின்
வேலைக்காரி,
வெட்கப்பட்ட முனிவர்
வேதனையுற்றார்,
வேலைக்காரியிடம்
கையேந்தினார்
அறிவு பிச்சைக்கு,
கதையென்றாலும்
கரு உண்டு—கற்றது
கை மண்ணளவு
கல்லாமல் அறிவது
உலகளவு
அது தான் அநுபவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக