ஞாயிறு, 25 டிசம்பர், 2016

தொலைத்துவிட்டு.

நீதி எப்போதும்,எங்கும்
நிமிர்ந்து காணும்,
உச்சம் தொட்ட அது
உலகுக்கு நெறிமுறையை
போதிக்கும்,
மக்களிடம்
மரியாதை பெறும்,
தனக்கு நிகராக
தரணியில் யாருமில்லையென
தற்பெருமை கொள்ளும்,
இத்தனை சிறப்பிருந்தும்
அதன் சுழி
சும்மாயிருக்க விடாது,
சுழியை நீக்கிவிட்டு
நிதியிடம் நேசமாகும்

நேர்மையை தொலைத்துவிட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக