சனி, 24 டிசம்பர், 2016

விண்மீன்களென.

உலா வரும் நிலவைக் காட்டி
ஊட்டிவிடும் குழந்தைக்கு
ஒரு பாதி வயிற்றுக்கும்
மறு பாதி முத்துக்களாய்
முகத்தில் பதிந்து
ஒளி கூட்ட

நட்சத்திரம் புடை சூழ
நடை பயிலும் நிலவைபோல
தன்னோட குழந்தை முகம்
தகதகன்னு பிரகாசிக்க
தன் குழந்தை தான் அழகென
தாய் மனம் மகிழ

விண்ணை பார்த்த
பிள்ளை நினைத்திருக்கும்
நிலவும் தன்னைப்போல
சோறு உண்ணும்போது
சிதறிய பருக்கைகள் தான்

விண்மீன்களென.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக