வெள்ளி, 23 டிசம்பர், 2016

மறக்க இயலுமா?

தோண்டத் தோண்ட
ஊரும் நீருபோல
தோண்டும் இடமெங்கும்
மாண்ட உடல்கள்,
உயிர் பிரிந்த இடத்தில்
பயிர் முளைத்தெழும்
பரிதாபம்

நல்லதும், கெட்டதும்
மாறி, மாறி நிகழ்வது
பூமிக்கு வாடிக்கை,
அதனால் தானோ
இலங்கை மண்ணில்
இரத்தக்கறை யுத்தத்தால்
செத்து மடிந்தனர் மக்கள்

தப்பிப்பிழைத்த
இரு சிறார்கள்
உயிருக்கு பயந்து
ஒதுங்கி பதுங்கியபோது
ஒடுங்க வைத்த காட்சி,
தெய்வமேயானாலும்
தடுமாற்றம் காணும்

அன்னையைத் தேடி வந்த
அந்த சிறுவர்கள்
கண்ட காட்சி—கடலலைக்
கைமாறு செய்வதுபோல்
காலமானத் தாயை
கரையோரம் சேர்த்தது,
தொப்புள் கொடி உறவை
எளிதில் மறக்க இயலுமா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக