சனி, 8 டிசம்பர், 2018

திருத்த இயலாது




வயிற்றுப் பிழைப்புக்கு

வழிகாட்டும் பெற்றோர்

வளரும் பிள்ளைகளுக்கு

வாழ்வியல் சிந்தனையை

விவரிக்காமல் போனதும்



நாட்டு பற்றையும்

நாட்டின் பண்பாட்டையும்

முதன்மைப் பாடங்களாக

மாணவர்களுக்குக் கற்று தராமல்,

அவர்களை ஆசிரியர்கள்

இயந்திரமயமாக்கியதும்



இயந்திரமயமானதால்

அன்பு,பாசம், மனிதநேயம்

அத்தனையும் தொலைந்துவிட

மாணவன், தான் மட்டும் வாழ

வழி தேடுவது வாடிக்கை



பெற்றோரும், ஆசிரியரும்

பள்ளி மாணாக்கர்களை

15 வயதுக்குள் திருத்தாவிடில்

அவர்களை அரசாலோ, சட்டத்தாலோ

ஒருபோதும் திருத்த இயலாது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக