சனி, 7 செப்டம்பர், 2019

வழிகாட்டுவதில்லை




அதிகாலைப் பொழுது
ஆதவனை  துணைக்கு தேடாமல்
நடை பயிற்சிஅப்பொழுது
ஒரு மனிதன் கைவண்டி
ஒன்றை இழுத்து சென்றான்
கூர்ந்து கவணித்ததில் அவன்
ஒரு கிரிமினல் கைதியாக
இருந்தவன்

களவுத் தொழிலை விட்டு
உழைக்க ஆரம்பித்தது
எனக்கு மகிழ்ச்சி என்றேன்,
அதற்கு அவன்
இந்தக் கைவண்டியையும்
திருடி தான் எடுத்து செல்கிறேன்
என்றான்
உண்மையோ, பொய்யோ!

பலமுறை  தவறிழைத்தவர்கள்
பிறர்  அவர்களைப்
பாராட்டுவதாக எண்ணி
தவறு செய்து பிழைக்கிறார்கள்,
திருடுகிறவர்களை
திருத்தமுடியாமல் ஒதுங்குகிறோம்
இல்லை உதவுகிறோம்,--முறையாக
வழிகாட்டுவதில்லை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக