சனி, 7 செப்டம்பர், 2019

சிறந்ததல்லவா!



நாளை என்பது
நிலையானதல்ல
நாளை என்று வரும்போது
இன்றாகவே மாறிவிடும் --அதனால்,
காலக்கணக்கில் வராதது,
கடைகளில் எழுதப்பட்டவை
இன்று ரொக்கம்,
நாளை கடன் என்று எழுதி
நம்மை ஏமாற்றுகிறார்களோ!

விரும்புகிற வாழ்வையும்
அறத்தையும்,
இன்றே செய்திடல் நன்று
நாளையே வராதபோது
நாளை நம் இருப்புக்கு
என்ன நிச்சயம்?
இன்று செய்யும் வினைகள்
நீங்கள் தளர்ந்து நிற்கும்போது
உங்களுக்கு துணையாக
உதவலாம் அல்லவா!

மூப்பும், சாவும் கண்ணுக்கு
முன்னால் வந்து நிற்கும்,
அழிக்கும் நோய்கள்
வரிசைகட்டி நிற்கும்
ஆதலால் நற்காரியங்களை
இயலும்போதே செய்திடுங்கள்,
நாளைக்கும் வராத
நாளையைக் காட்டிலும்
இன்றைக்கு இருக்கிற

இன்று சிறந்ததல்லவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக